Sunday, January 8, 2012

கவிஞர் நா.முத்துகுமார் கவிதைகள்

 தூர்

வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்திற்கொருமுறை
விசேஷமாய நடக்கும்

ஆழ்நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்

கொட்டாங்கச்சி, கோலி, கரண்டி
கட்டையோடு உள் விழுந்த
துருப்பிடித்த ராட்டினம்
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்
சேற்றிற்குள் கிளறி
எடுப்போம் நிறையவே

சேறுடா சேறுடாவென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?

பகை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேல் வருவார்

இன்றுவரை அம்மா
கதவுகளின் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்
கடைசிவரை அப்பாவும்

மறந்தே போனார்
மனசுக்குள் தூரெடுக்க

Saturday, January 7, 2012

கவிஞர்.தபூ சங்கர் கவிதைகள்

நீ யாருக்கோ செய்த

மெளன அஞ்சலியைப்

பார்த்ததும்...

எனக்கும்

செத்துவிடத் தோன்றியது.


 
அற்புதமான காதலை மட்டுமல்ல

அதை உன்னிடம் சொல்ல முடியாத

அதி அற்புதமான மெளனத்தையும்

நீதான் எனக்குத் தந்தாய்.





thanks and regards,
கவிஞர்.தபூ சங்கர்


Wednesday, January 4, 2012

My favourite tweets

பெட்ரோல் விலை இரு வாரங்களுக்கு உயர்த்தப்படமாட்டாது - எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு #அப்புறம் வட்டியும் முதலுமா வாங்கிக்குவாங்க....


வருசா வருசம் வாழ்த்து சொல்ற மாதிரி விடிஞ்சதும் இதயும் சொல்றானுக “என்ன இருந்தாலும் போன நியூ இயர் மாதிரி இல்ல “ !


 இழப்பதற்கு எதுவும் இல்லை அன்பைத்தவிர பெறுவதற்கும் எதுவும் இல்லை அன்பைத்தவிர- எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

thanks and regards,
twitter

Happy new year

Happy new year to all friends and  bloggers...............all day is good day.........